close
Choose your channels

கலாபவன் மணி மரணத்திற்கும் திலீப் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவத்திற்கு நடிகர் திலீப் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தற்போது திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் மரணம் அடைந்த நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கும் திலீப் தான் காரணம் என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல மலையாள இயக்குனர் பைஜூ என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இன்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுவதால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.